தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே அனைத்து பணியாளர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு ஆஜராக வேண்டும். அதிலும் குறிப்பாக சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.