தமிழகத்தில் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் சிறப்பு முகாம்கள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை பத்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதல் கைவினைஞர்கள் வரை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.