விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் DIG முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். கள்ளச் சாராய மரணங்களைத் தொடர்ந்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு DSPகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் வேலூரில் கள்ள சாராயம் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.