மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்திரி வாழ்க்கையை மையமாக கொண்டு தெலுங்கில் மகாநடி படத்தை இயக்கி பிரபலமானவர் நாக் அஸ்வின். இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வந்தது. இதனிடையே சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை பெற்றார். நாக் அஸ்வின் இப்போது பிரபாஸ் கதாநாயகான நடிக்கும் புது படத்தை டைரக்டு செய்யவுள்ளார்.

இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உட்பட பிரபல நட்சத்திர பட்டாளம் நடிக்கவுள்ளனர். ரூபாய்.500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குரிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.