சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறால் விமானம் தாமதமாக புறப்படும் என்று பயணிகளிடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தாமதமானதால் விமானத்தில் பயணிக்க இருந்த 168 பயணிகளும் விமான நிறுவனத்தின் கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர் ஆனால் பயணிகள் விமானத்திற்காக சுமார் 12 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.