புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம் மீன் துறைமுகத்திலிருந்து கடந்த 12 ஆம் தேதி 79 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். 32 நாட்டிகள் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் சின்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நந்தகுமார், நரேஷ் அஜித், அஜய், ஆனந்தபாபு, குமார் ஆகியோரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டனர்.

இதனால் அவர்களது குடும்பத்தினர் இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்க தவறினால் பாராளுமன்ற தேர்தலுக்கு புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.