நாகப்பட்டினம் அக்கரைபேட்டை கடற்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை காவலர் அன்பு குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கரையோரமாக கற்களுக்கு இடையே கிடந்தது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.