மதுரை மாவட்டம் மேலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு தற்போது பிற்பகலில் தேர்வு நடைபெற்று வருவதால் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால் மரம் ஒடிந்து மாணவிகளின் மீது விழுந்தது. இதில் 17 மாணவிகள் காயமடைந்த நிலையில் 14 பேர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.