அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமா தேவியின் தலைமையில் போலீசார் மலங்கன்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தென்வடல் தெருவை சேர்ந்த கலா என்பவரையும் மலங்கன்குடியிருப்பு மேல தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரையும் கைது செய்ததோடு அவர்களது கடையில் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.