கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாக்குறிச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பபிதா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கீழ் குப்பத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பபிதா தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு வந்தார். அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக சென்ற கார் ஸ்கூட்டி மீது மோதியது. மேலும் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பபிதா மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுசாமி, தங்கவேல், காரில் வந்த சிவஞானம், செல்வராஜ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.