விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் பகுதியில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பர்களான விக்கி, விஜயதாஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் வழியாக புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் காட்ரம்பாக்கம் சந்திப்பில் சென்ற போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சபரிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த இரண்டு பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்கி பரிதாபமாக உயிரிழந்தார். விஜயதசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.