கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதிய வேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த அதே ஊரை சேர்ந்த வீரன் என்பவர் சிறுமியிடம் பள்ளியில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் பள்ளியின் அருகே இருந்த கரும்பு தோட்டத்திற்கு சிறுமி அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வீரனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

மேலும் இது குறித்து சிறார் உதவி மையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து வீரனை கைது செய்ததோடு சிறுமியை பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.