சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் – பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் திருப்பதி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த திருப்பதி பர்மா குடியிருப்பு பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு சென்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென திருப்பதி மயங்கி விழுந்தார். அவரை நண்பர்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருப்பதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.