பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குற்ற பதிவேடுகள் கூடம், ஆயுதப்படை வளாகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஆயுதக் கிடங்கு, தனிப்பிரிவு அலுவலகம், மோப்பநாய் படை பிரிவு, மோட்டார் வாகன பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பி.பகலவன் பார்வையிட்டு பதிவேடுகளை சரி பார்த்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளா தேவி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.