திருவள்ளூர் மாவட்டம் திருவானூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதிய உணவு நேரத்தில் மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர் உணவு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அருகே மழையில் நனைந்து ஈரப்பதத்துடன் இருந்த ஆலமரம் சரிந்து மாணவர்கள் மீது விழுந்துள்ளது.

இதில் 12 மாணவர்கள் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லேசான காயம் ஏற்பட்ட மாணவ மாணவிகள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.