பெண்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் மகளிருக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டுப் பெண்கள் தன்னம்பிக்கையோடும் சுயமரியாதை உணர்வுடனும் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் குடும்ப அட்டைக்காக ஒதுக்கப்பட்ட தேதியில் வந்தால் போதும். இந்த முகம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.