தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கான இலவச வேட்டி சேலை ஜனவரி 2ம் தேதியே வழங்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வேட்டி மற்றும் சேலை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனை சரி செய்யும் வகையில் இந்த ஆண்டு வேட்டி சேலை நெய்யும் பணியை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இனி தாமதமாக வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.