கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு கைகளையும் இழந்த தீபா(34) என்ற மகள் உள்ளார். நேற்று தீபா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று தனது காலால் கோரிக்கை மனு எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு இரண்டு கைகளும் இல்லை. எனது தம்பி குமரன் இரண்டு கால்களும் ஊனமுற்றவன்.

எங்களது குடும்பத்தை காப்பாற்ற அவன் பெட்டிக்கடை வைக்க முயற்சி செய்கிறான். எனவே பண்ருட்டி லிங்க் ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே பெட்டிக்கடை வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். அதன் மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் எங்களது குடும்பத்தை கவனித்துக் கொள்வோம். எனவே பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.