கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வருண்பிரகாஷ் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அருண் பிரகாஷும் பொள்ளாச்சியில் நர்சாக வேலை பார்க்கும் 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரகாஷ் பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு வருண் பிரகாஷ் மறுப்பு தெரிவித்தார். மேலும் அவரது பெற்றோரும் இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வருண் பிரகாஷ் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.