நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஓய்வெடுப்பதற்கு வசதியாக ஆயிரம் ஓய்வெடுக்கும் கட்டிடங்களை கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ட்ரக் , பேருந்து மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இது வசதியாக இருக்கும். இந்த கட்டிடங்களில் பாதி எண்ணெய் நிறுவனங்களால் உருவாக்கப்படும், மீதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.