உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இஸ்லாமிய நண்பருக்கு பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, அதைத் திருப்பித் தருகிறேன், ஹோட்டலுக்கு வந்து வாங்கிக்கொள்ள அந்த நபர் கூறியிருக்கிறார்.

இதனால் அந்த இளம்பெண் அங்கு சென்றார். அந்த ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டி, கூட்டு பலாத்காரம் செய்தனர். மேலும், அதனை வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.