மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஹிரா நகர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், 7 பக்கம் கொண்ட கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், 30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் என 8, 9 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துள்ள தகவலை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வாழ்க்கையில் தனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். திருமணம் ஆகாத இளைஞரான அவர், மனநல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்திருக்க கூடும் என போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.