டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். நாளையும்,  நாளை மறுநாளும் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்தார். உலகத் தலைவர்கள் பலரும் இந்தியா வந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்  டெல்லி வருகை. டெல்லியில் 9, 10ஆம் தேதி நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் வருகை. பிரதமர் மோடி நரேந்திர மோடியுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். டெல்லி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.