டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

டெல்லியில் 9, 10 தேதிகளில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகின்றது. நாளையும்,  நாளை மறுநாளும் டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி உலக தலைவர்கள் பலரும் இந்தியா வந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ  பைடனும் டெல்லி வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு இந்தியா சார்பில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் –  பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சந்தித்தார். இந்த சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.