காங்கிரஸின் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார். ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் சில ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “ஒவ்வொரு முறையும் அதானி விவகாரம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம், எங்கள் கவனத்தை திசைத்திருப்ப பிரதமர் மோடி ஒரு புது சர்ச்சையை முன்னெடுக்கிறார். ‘இந்தியா? அல்லது பாரத்’ விவகாரமும் அப்படி ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார்.