தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. ‘PS-2’ படத்தின் உலக அளவில் முதல் நாள் வசூல் 60 கோடி என தகவல் வெளியானது. ஆனால், முதல் பாகம் வெளியான முதல் நாளில் 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால், படத்தின் 2ஆம் பாகம் மிகப் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ‘PS-2’வும் முதல் பாகம்போல் இல்லை என்பதுதான் ரசிகர்கள் பலரின் கருத்தாக உள்ளது.