தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சமந்தாவின் புகைப்படத்தை பார்த்தவர்களோ அவரின் துணிச்சலை பற்றி இணையத்தில் பேசி வருகிறார்கள். அதாவது பொதுவாக ஹீரோயின்கள் தங்களுக்கு உடல்நலம் குறித்த பிரச்சினைகள் இருப்பது வெளியே தெரிந்தால் மார்க்கெட் சரிந்து விடும் என்பதற்காக அதை பற்றி வெளியே சொல்ல மாட்டார்கள்.

ஆனால் நடிகை சமந்தா தன்னுடைய உடல்நிலை பிரச்சினை குறித்து துணிச்சலோடு வெளியே தைரியமாக சொல்லியுள்ளார். சமந்தாவை தொடர்ந்து சில நடிகைகள் கூட தங்களுடைய உடல்நல பிரச்சனை குறித்து பகிர்ந்து கொண்டார்கள். இந்நிலையில் நடிகைகள் சொல்லத்தை தயங்கும் விஷயத்தை நடிகை சமந்தா சொன்னது அவர் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதோடு அவருடைய துணிச்சலையும் பாராட்டி வருகிறார்கள்.