பொதுவாக பொதுமக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிக முக்கியமான திட்டம். இந்த திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி விகிதத்தில் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாக மாறும். நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவதற்கு இது ஒரு நல்ல திட்டம்.

ஒன்பது வரு டம் மற்றும் 7 மாதங்களில் ஒரே நேரத்தில் முதலீடு இரட்டிப்பாக்குகிறது. உதாரணமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கான கிசான் விகாஸ் பத்ரா திட்டம் முதிர்வு காலத்தில் ஒரு லட்சம் கார்பசை உங்களுக்கு வழங்கும். இந்த திட்ட த்தில் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்ச தொகை ஆயிரம் மட்டும் தான். ஒரு நபர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம் . அதுமட்டுமின்றி 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தன்னுடைய சொந்த பெயரில் கணக்கு தொடங்கும் வசதியும் உள்ளது.