சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் இந்த செய்திக்கு சிபிஎஸ்இ வாரியம் பதில் அளித்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் பன்னெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ஒத்தி வைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாகவும் புதிய தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ வாரியத்தின் பெயரில் போலி கடிதம் வெளியானது.

அதிகாரப்பூர்வ X தலம் இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த கடிதம் முற்றிலும் போலியானது எனவும் வாரியத்தால் அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.