தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தற்போது இதற்கான பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு விண்ணப்பிக்கும் போது பயனாளர்கள் கட்டாயம் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள் கைரேகை பதிவு கருவி இருப்பதை உறுதி செய்யவும் ஏற்கனவே இருக்கும் கருவிகளை சீரமைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.