டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்..

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்படும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றுவதற்கு  வாய்ப்பே இல்லை. தற்போது உள்ள நேரமே தொடரும்.. டாஸ்மாக் செயல்படும் நேரம் தொடர்பாக சிலரின் கவலைகளை மட்டுமே நேற்று பகிர்ந்து கொண்டேன். டாஸ்மாக்கை காலையில் திறக்கும் திட்டம் எதுவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.