மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவிற்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் இனிய தினமும் காலை 7 மணிக்கு காபி, டீ குடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக எழுந்ததும் ஜாலியாக மதுபானம் குடிக்கலாம். தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் என அனைவரும் காலையில் குடித்துவிட்டு வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு உத்திரவாதம் யார் கொடுப்பது என்று செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.