அயோத்தியில் இன்று திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி நாளை முதல் பக்தர்கள் அயோத்தி ராமரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 – 11.30 மணி வரையிலும், மதியம் 2 – இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவைகள் விரைவில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோயிலில் காலை 6:30, மதியம் 12, இரவு 7:30 மணிக்கு சிறப்பு ஆரத்தியும் நடைபெறும்.