மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான  சட்டமன்றத் தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. இதில், ராஜஸ்தானுக்கு நவ.23-ல் தேர்தல் என அறிவித்த நிலையில், தற்போது நவ. 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால், நவ. 23ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், திருமணம் போன்ற விழாக்களுக்கு மக்கள் செல்ல நேரிடும். இதனால், வாக்குப்பதிவு பாதிக்கக் கூடாது என்பதற்காக தேர்தல் தேதி மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.