இந்தியாவில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை பொது தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மாணவர்கள் பொது தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வரும் இடையில் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.