தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பித்த 60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் விவரம் ஆதார் மற்றும் பான் கார்டு சரிபார்ப்பின் மூலம் தெரியவந்தது.

அதனைப் போலவே கார் பதிவு மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் விவரமும் ஆதார் மூலம் தெரிய வந்தது. அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்துவது ஆண்டுக்கு 3000 யூனிட் பயன்படுத்துவது மின் ரசீது மூலம் தெரியவந்தது. இவர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கிடையாது என அரசு தெரிவித்துள்ளது.