தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில் ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல மோடியின் கேரண்டி என்ற விளம்பரத்துடன் வந்திருக்கிறார்.

அவரின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை. பத்தாண்டுகளாக சொன்ன எதையுமே செய்யாமல் சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்ற விளம்பரம் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லை?”என விருதுநகரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை ஆதரித்து பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.