தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய அவர், சகோதரர் ஸ்டாலின் வழங்கும் ஆயிரம் ரூபாய் தாய் வீட்டை சீர் என பெண்கள் கூறுவதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களும் திராவிட மடல் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் பயனடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.