புனித வெள்ளி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மார்ச் 28 ஆம் தேதி 505 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், நாளை மறுநாள் மார்ச் 30 345 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி மற்றும் பெங்களூருக்கு இன்று முதல் மார்ச் 30 வரை 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.