தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே காய்கறி, பழங்களின் விலை விண்ணை முட்டும் சூழலில், மளிகைப் பொருட்களும் விலை உயர்வது வேதனையளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.