மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், நேற்று நாகர்கோவிலில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில், பாஜக கவுன்சிலர்கள் 3 பேர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்