தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல். மணிக்கு 180 முதல் 190 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 21 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மோக்கா புயலின் தாக்கம் வங்கதேசத்தில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மறுபுறம், புயலை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.