ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் தன் மனைவி, 4 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே குடிப் பழக்கத்திற்கு அடிமையான தந்தை கடன் வாங்க துவங்கினார். பல பேரிடம் கடன் வாங்கியதால் அவரது கடன் சுமை அதிகமானது.

இவ்வாறு பெருகி வரும் கடனிலிருந்து விடுபட, இவர் தன் 4 வயது மகளை வட்டிக்காரரிடம் ஒப்படைத்தார். இந்த பெண்ணை யாரிடம் அடமானம் வைத்துள்ளாரோ அந்நபர் அவளை பிச்சைக்கு அனுப்புவது வழக்கமாகும். இப்படி தந்தை தனது கடனை அடைப்பதற்காக மகளை அடகுவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.