பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிலிண்டர் தொல்லையிலிருந்து மக்கள் விடுதலை பெற்று உள்ளனர். இதனிடையில் CNG, PNG எரிவாயு இணைப்புகள் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்திருக்கிறது. இதன் வாயிலாக மக்கள் பெருமளவு நிவாரணம் பெற இருக்கின்றனர்.

உண்மையாக அரசு நடத்தக்கூடிய இந்தியன் ஆயில் CNG(அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் PNG(குழாய் இயற்கை எரிவாயு) இணைப்புகளை குடியிருப்பு அலகுகளுக்கு விநியோகிக்க துவங்கியுள்ளது. இதன் வாயிலாக GAN இணைப்பு குறித்து மக்கள் நிம்மதி பெறவுள்ளனர்.

கூடியவிரைவில் மக்களுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது “நாடு முழுவதும் 1.50 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஆகவே விரைவில் மக்கள் இந்த இணைப்புகளை பெற இருக்கின்றனர். CNG, PNG மற்ற மாற்று எரிபொருட்களை விட சுமார் 30% சிக்கனமானவை. அதோடு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.