காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் போர்க்குற்றம், இனப்படுகொலை; இந்த இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டிய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.