இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 12 நாட்களாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் பக்கபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள மருத்துவமனை மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டதில் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து ஈரான் நேரம் முடிந்துவிட்டது என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக இஸ்ரேலிய அதிகாரிகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றங்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஈரானின் தலைவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.