மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீண்டும் மஞ்சப்பை என்ற பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நெகிழி இல்லாத வளாகங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெறுபவர்களுக்கு விருதுடன் முதல் பரிசாக 10 லட்சமும்,இரண்டாம் பரிசாக 5 லட்சம் முன் மற்றும் மூன்றாம் பரிசாக மூன்று லட்சமும் வழங்கப்படும் எனவும் இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக chennai.nic.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.