தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 37,391 அரசு பள்ளிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அரசு முன்னுரிமைகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க பல்வேறு பணிகள் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் உடற்கல்வி சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் பயன் பெரும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனது மாவட்ட கல்வி அலுவலர்களின் உள்ள விளையாட்டு உபகரணங்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் பெற்றுச் செல்ல மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.