திருச்சியில் இன்று  மற்றும் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். கருமண்டபம் பகுதியில் இன்று  மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின்  மறுநாள் அரசு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

இதனால், இந்த இரண்டு  நாட்களும் திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.