சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தன்னிச்சையாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அனுமதியின்றி சாலை வெட்டுக்களை தன்னிச்சையாக மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையோரம் கிடக்கும் வாகனங்கள் அகற்றப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.